1595739438 students 2
செய்திகள்இலங்கை

பாடசாலைகள் ஆரம்பம்!- வெளியானது அறிவிப்பு!!

Share

பாடசாலைகள் ஆரம்பம்!- வெளியானது அறிவிப்பு!!

எதிர்வரும் ஒக்ரோபர் மாத நடுப்பகுதியில் கட்டம் கட்டமாக பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சின் பாடசாலை செயற்பாடுகள் தொடர்பான செயலாளர் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும்போது முன்னுரிமை கொடுக்க வேண்டிய வகுப்புகள் தொடர்பில் தற்போது திட்டமிடல்களை தயாரித்துள்ளோம்.

முதற்கட்டமாக, உயர்தரம், சாதாரணதரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பிரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கு முகங்கொடுக்கின்ற மாணவர்களுக்கு பாடசாலையை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். குறித்த மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் ஒக்ரோபர் மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். ஆனால் இந்த தீர்மானத்தை உறுதியாக கூற முடியாது.

பாடசாலையை மிக விரைவில் ஆரம்பிக்குமாறு எமக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில்,  சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களை பின்பற்றி மிக விரைவில் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான திட்டங்களை தயாரித்து வருகிறோம்.

எதிர்வரும் காலங்களில் சரியான திட்டமிடலுடன் பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம், தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டு மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிக்கும்போது குறைந்தளவு மாணவர்கள் கல்வி கற்கின்ற பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம், – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...