school children
செய்திகள்இலங்கை

பாதுகாப்பற்ற நிலையில் பாடசாலை மாணவர்கள்!

Share

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து அதிகமான மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் தொடர்ச்சியாக கொரோனா தொற்றுக்குள்ளாகின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஆகவே, பாடசாலை சமூகத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், அதிகமான மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகின்றார்கள் எனவும், இதனால் எதிர்காலத்தில் ஒட்டுமொத்த பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் மற்றும் கல்விசாரா ஊழியர்களும் வேகமாக பாதிக்கப்பட கூடிய சாத்தியபாடுகள் அதிகமாக காணப்படுவதாக ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சருக்கு தெரிவித்துள்ளனர்.

மேலும், பாடசாலைகளில் சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை பின்பற்றபடாத நிலையே இதற்கான காரணமாகும் என சுட்டிக்காட்டியிருந்தனர்.

ஏனெனில், பாடசாலைகளில் கொரோனா தொற்று நீக்கிகளை வாங்குவதற்காக முறையான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படவில்லை அத்தோடு தமது சொந்த பணத்தில் கொரோனா பரிசோதனை செய்கின்ற நிலையில் ஆசிரிய சமூகம் காணப்படுகின்றது.

ஆகவே பாடசாலைகளில் கொரோனா பாதுகாப்பு குறித்த சுற்றிக்கை வெளியிடப்பட வேண்டும் என ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 32
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை – கொரியா இடையே பொருளாதார ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தை: கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

இலங்கை அரசாங்கத்திற்கும் கொரியக் குடியரசுக்கும் இடையிலான 2026-ஆம் ஆண்டிற்கான பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதி (EDCF)...

Untitled 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இனமலுவ ஊரக வங்கியில் துணிகர கொள்ளை: 20 பவுண் தங்க நகைகள் மற்றும் பணம் திருட்டு

ரங்கிரி தம்புள்ளை பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான இனமலுவ ஊரக வங்கிக் கிளையில், மர்ம நபர்கள்...

Untitled 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

என்.டி.பி வங்கியில் ரூ. 13.2 பில்லியன் மோசடி: மத்திய வங்கியின் கண்காணிப்பு தோல்வி குறித்துப் பாராளுமன்றத்தில் கேள்வி

தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) குறிப்பிட்ட ஒரு பிரிவில் சுமார் 13.2 பில்லியன் ரூபாய் மதிப்பிலான...

Untitled 29
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வித்யா படுகொலை வழக்கு: ஸ்விஸ் குமார் உள்ளிட்ட நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கடந்த 2015-ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுப்...