image 1531977056 33813cf8fa
செய்திகள்இலங்கை

நிவாரணப் பொதி விநியோகிக்கும் சதொச!!

Share

சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 8 பிரதான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி 1,998 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

குறித்த நிவாரணப் பொதி விநியோக நடமாடும் சேவை இன்று முதல் நாடுதழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும்.

இது தொடர்பில் , வர்த்தகத்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு பந்துல குணவர்த்தன உரையாற்றுகையில் , பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய விற்பனை நிலையங்களை காட்டிலும் சதொச விற்பனை நிலையத்தில்அத்தியாவசிய பொருட்கள் நிவாரண விலையில் விற்பனை செய்யப்படுகின்றன .

பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை நிவாரண அடிப்படையில் வழங்க அரசாங்கம் பல திட்டங்களை இதுவரை காலமும் சதொச நிறுவனம் ஊடாக முன்னெடுத்துள்ளது என தெரிவித்தார்.

மேலும், பண்டிகை காலத்தை முன்னிட்டு 8 பிரதான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப்  பொதியை 1998 ரூபாவிற்கு சதொச விற்பனை நிலையம் ஊடாக விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பொருட்களை வாங்கும்போது 95 ரூபா பெறுமதிமிக்க பப்படம் பொதியொன்று இலவசமாக வழங்கப்படவுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ticket scaled 1
செய்திகள்இலங்கை

பேருந்துப் பயணங்களுக்கு இலத்திரனியல் அட்டை கட்டணம்: திட்டம் நாளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பம்!

பேருந்துப் பயணங்களுக்கான இலத்திரனியல் அட்டை கட்டண முறையை (Electronic Card Payment) அறிமுகப்படுத்தும் திட்டம் நாளை...

images 1 1
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்கிரமசிங்க நிதி மோசடி வழக்கு: பிரித்தானியாவில் வாக்குமூலங்களைப் பதிவு செய்து விசாரணைத் தீவிரம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காகப் பிரித்தானியப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம்...

articles2FLLGAKqVNikCDu5b4YOPa
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

images 2 1
இலங்கைசெய்திகள்

ஜீவன் தொண்டமானுக்கு இன்று திருப்பத்தூரில் திருமணம்!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் (CWC) பொதுச் செயலாளரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின்...