54 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கத்திமுனையில் கொள்ளை! – இளைஞன் மடக்கிப்பிடிப்பு

Share

கத்திமுனையில் கொள்ளையிட வந்த இளைஞர் அங்கிருந்தவர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஜூரித்த சம்பவம் யாழ்ப்பாணம் – நல்லூர் – கைலாசபிள்ளையார் கோவிலடியில் அமைந்துள்ள சொக்கன் கடையில் இன்று மதியம் நடைபெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சொக்கன் கடைக்குள் புகுந்த குறித்த இளைஞன் தனது பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை காண்பித்து பணம் கேட்டுள்ளார்.

இதன்போது, அங்கு நின்றவர்கள் குறித்த இளைஞனை மடக்கி பிடித்து கத்தியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பொலிஸாருக்கு அறிவித்த நிலையில், அங்கு வந்த பொலிஸாரிடம் இளைஞனை ஒப்படைத்துள்ளனர்.

அதேவேளை, குறித்த இளைஞன் இன்று – காலை, அரியாலை மாம்பழம் சந்திக்கு அருகில் உள்ள புத்தக கடைக்குள் புகுந்து அங்கிருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அந்த பெண் கூக்குரல் எழுப்பியநிலையில் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

அதன் பின்பே நல்லூர் – சொக்கன் கடைக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 3 5
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் கோர மண்சரிவு: 7 பேர் பலி! 82 பேரைக் காணவில்லை – மீட்புப் பணிகள் தீவிரம்!

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும்...

25284407 tn46
உலகம்செய்திகள்

அமெரிக்காவை உறைய வைக்கும் பெர்ன் பனிப்புயல்: 10,000 விமானங்கள் இரத்து – 18 மாநிலங்களில் அவசரநிலை!

அமெரிக்காவின் பெரும் பகுதியைத் தாக்கி வரும் ‘பெர்ன்’ (Winter Storm Fern) எனப்படும் மிக சக்திவாய்ந்த...

articles2FWeZuOSJYmiw4RXxNRts3
செய்திகள்இலங்கை

2026 அரச வெசாக் நிகழ்வு மே 30-இல்: மகாநாயக்க தேரர்களின் இணக்கத்துடன் தீர்மானம்!

2026-ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ அரச வெசாக் (State Vesak Festival) நிகழ்வை மே மாதம் 30-ஆம்...

MediaFile 2 5
செய்திகள்இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி! கட்டுநாயக்கவில் வைத்து சிஐடியினரால் கைது!

சர்வதேச பொலிஸாரினால் (Interpol) சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியாவிற்குத் தப்பிச் சென்று...