Gas Protest 03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொலைகார கேஸ் சிலிண்டர்களைத் திரும்ப பெறுக: வெடித்தது போராட்டம் (படங்கள்)

Share

நாட்டில் தற்போது எரிவாயு சிலிண்டர் வெடிப்புகள் ஆங்காங்கே இடம்பெற்று வருகிறது. இந்தநிலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பிற்கு எதிராகவும் மற்றும் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி, ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கத்தினால் இன்று (04) நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

Gas Protest 01

ஆர்ப்பாட்டத்தின் போது, “கொலைகார எரிவாயு சிலிண்டர்களை திரும்ப பெறு, இழப்பீடு கொடு, ம்ற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறை, என்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளையும் போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

இதேவேளை நிறுவனங்களின் நலனுக்காக இந்த நாட்டில் உள்ள சாதாரண மக்களின் உயிர்களை அரசாங்கம் பலிகொடுத்துள்ளதாகவும், சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஹேமமாலி அபேரத்ன தெரிவித்துள்ளார்.

Gas Protest 03

மேலும், பொதுமக்களுக்கு பாதுகாப்பான எரிவாயுவை வழங்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறுவதாக யாழ். உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக...

31 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின்...

6 19
இலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக...

19 12
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்...