weee 626x380 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஓய்வுபெறும் வயதெல்லை: பரிசீலனை செய்யாவிடில் வீண் பிரச்சினை

Share

அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை 65 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு மீள் பரீசிலனை செய்யப்பட வேண்டும் என்று அரச பங்காளிக்கட்சியான இலங்கை கம்யூனிஸ் கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத்திட்ட உரைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க, இந்த யோசனையை முன்வைத்தார்.

அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை 65 ஆக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அது கட்டாயமாக்கப்படக்கூடாது. 60 வயதுக்கு மேல் எப்போதும் ஓய்வுபெறலாம் என்ற ஏற்பாடு இடம்பெறவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் வீண் பிரச்சினை உருவாகும்.

அதேபோல அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை. தற்போதைய சூழ்நிலையில் அதனை செய்வது கடினம். எனினும், கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே அதனை செய்யுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.”- என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68e756024d1e0
செய்திகள்இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது மீளாய்வு: டிசம்பர் 15 அன்று பரிசீலனை – 347 மில்லியன் அமெரிக்க டொலர்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீடிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் ஆதரிக்கப்படும் இலங்கையின் பொருளாதார...

Parliament2020
செய்திகள்அரசியல்இலங்கை

பாராளுமன்றில் அமைச்சு ஒதுக்கீடுகள் நிறைவேற்றம்: போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வீடமைப்பு அமைச்சுக்களுக்கு ஒப்புதல்!

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் எட்டாவது நாளான இன்று (நவம்பர் 24),...

1795415 01 1
செய்திகள்இலங்கை

புன்னாலைக்கட்டுவன் கொலை: தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு – சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இன்று...

MediaFile 2 6
செய்திகள்அரசியல்இலங்கை

பிரிவினைவாதக் கொள்கைகள்: கனேடிய உயர்ஸ்தானிகரிடம் அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் கத்ரீன் மார்ட்டினை (Isabelle Catherine...