P.B. Jayasundera
செய்திகள்அரசியல்இலங்கை

பதவி விலகுகிறார் பி.பீ. ஜயசுந்தர

Share

ஜனாதிபதி செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, 2022 பெப்ரவரி முதலாம் திகதி முதல் நிதி அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகராக செயற்படவுள்ளாரென அறியமுடிகின்றது.

ஜனாதிபதி செயலாளராக பதவி வகிக்கும் பிபீ ஜயசுந்தரவை பதவி விலகுமாறு ஆளுங்கட்சியில் உள்ள உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

இதனால் பதவி விலகுவதற்கு தீர்மானித்துள்ள அவர், இதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தை ஜனாதிபதி ஏற்று, புதிய செயலாளரை நியமிக்கும்வரை பிபீ ஜயசுந்தர பதவியில் நீடிப்பார்.

அதன்பின்னர் அவர் நிதி அமைச்சுக்கு செல்லவுள்ளார். பிரதமரின் ஆலோசனையின் பிரகாரம் அவருக்கு சிரேஷ்ட ஆலோசகர் பதவி வழங்கப்படவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில் பிபீ ஜயசுந்தர, திறைசேரி செயலாளராக செயற்பட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...