Cabral
செய்திகள்இலங்கை

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி வரையறை நீக்கம்

Share

அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த 100% வைப்புத் தொகை தேவைப்பாடு நேற்று முதல் நீக்கப்படுகிறது என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இதனை தெரிவித்துள்ளார்.

பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டை நிச்சயப்படுத்துவதற்கான ஆறு மாதகால வழிகாட்டல்’ வெளியீட்டு நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை கூறியுள்ளார்.

போதுமான அளவு அந்நிய செலாவணி காணப்படுகிறது. எதிர்வரும் 6 மாதங்களுக்கு தேவையற்ற பொருட்களை களஞ்சியப்படுத்த வேண்டாம்.

இறக்குமதியாளர்கள் பொறுப்புடன் செயற்படுவதுடன் தேவைக்கேற்ப மட்டுமே இறக்குமதியை மேற்கொள்ளுங்கள் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் கடன் வட்டிக்கான நிவாரணத்துக்கு 15 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 6 மாதங்களுக்கு வாகனம் சொத்துக்கள் சுவீகரிக்க வேண்டாம் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கோரியுள்ளார்.

நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் டொலருக்கு பற்றாக்குறை நிலவியதால் அத்தியாவசியமற்ற 623 பொருட்களுக்கு மத்திய வங்கியால் கடந்த செப்ரெம்பர் 09 ஆம் திகதி கடுமையான இறக்குமதி கட்டுபாடு விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...