prasanna gunasena 696x392444 1
செய்திகள்இலங்கை

இளைஞர்களால் நாட்டுக்கு ஆபத்து! – பிரசன்ன குணசேன

Share

இளைஞர்களால் நாட்டுக்கு ஆபத்து! – பிரசன்ன குணசேன

நாட்டில் இளைஞர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ள தயங்குவதானது நாட்டை ஆபத்து நிலைக்கு கொண்டுசெல்கிறது. இதனால் சமூகத்தில் கொரோனாத் தொற்று அதிகரித்துச் செல்லும் ஆபத்துள்ளது

இவ்வாறு அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தடுப்பூசி நிலையங்களுக்கு வருகை தரும் இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்படுகிறது.

தடுப்பூசி செலுத்துவதில் இளைஞர்கள் அக்கறை செலுத்தாதுள்ளனர். இதனால் அவர்கள் பாதிப்பை எதிர்கொள்ளாத நிலை காணப்பட்டாலும் , அவர்களால் சமூகத்தில் வைரஸ் பரவல் அதிகரிக்கும்.

சமூகத்தில் வைரஸ் பரவல் அதிகரிப்பதன் மூலமாக புதிய திரிபுடன் வைரஸ்கள் உண்டாகலாம். அவற்றை தடுப்பூசிகளால் கூட கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படலாம்.

அவற்றை கருத்து கொண்டே வைரஸ் திரிபுகளின் உருவாக்கத்தைக் குறைக்க உலக சுகாதார ஸ்தாபனம் தடுப்பூசிகளை செலுத்துமாறு பரிந்துரைத்துள்ளது – என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...