IMG 20220208 WA0037
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கீரிமலை சிறாப்பர் மடம் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

Share

யாழ்ப்பாணம் – கீரிமலை சிறாப்பர் மடத்தின் மீள் புனரமைப்பிற்கான இரண்டாம் கட்ட பணிகளுக்கு இன்றையதினம் அடிக்கல் நடப்பட்டுள்ளது.

அண்மையில் சிறாப்பர் மடத்தின் முதலாம் கட்ட புனர் நிர்மாண பணிகளை சிறாப்பர்மட நிதியத்துடன் இணைந்து தொல்லியல் திணைக்களம் மேற்கொண்டிருந்தது.

இந்நிலையில் சிறாப்பரின் நான்காவது வாரிசான பொன்னா விக்னராஜா அவர்களின் நினைவுதினமான இன்று விஷேட பூஜை வழிபாடுகள் சிறாப்பர் மடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்றது.

தொடர்ந்து யுத்த காலத்தில் அழிக்கப்பட்ட சிறாப்பர் மடத்தின் தெற்கு பகுதி வாசல் மற்றும் அதனுடன் இணைந்த பகுதியை சிறாப்பர் நிதியத்தின் அனுசரணையுடன் தொல்லியல் திணைக்களம் இணைந்து மீள் புனரமைப்பு செய்வதற்கான அடிக்கல் நாட்டும் விழா ஆகம முறைப்படி இடம்பெற்றது.

நிகழ்வில் யாழ் மாவட்ட தொல்லியல் திணைக்கள அதிகாரிகளான பா.கபிலன், உஷாந்தி, தொல்லியல் திணைக்கள ஊழியர்கள், நகுலேஸ்வ ஆலய குமார சுவாமி குருக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...