செய்திகள்இலங்கை

வீதிகளை புனரமைத்துத் தருக! – முல்லைத்தீவு மக்கள் கோரிக்கை!!

Share

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கோட்டைகட்டிய குளம் மற்றும் தென்னியன் குளம் ஆகியவை உள்ளிட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து வசதிகள் இன்மையால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.

பழம்பெரும் விவசாய கிராமங்களான தென்னியன் குளம், கோட்டைகட்டிய குளம் மற்றும் அம்பலப்பெருமாள் குளம் உள்ளடங்கலாக சுமார் 10க்கும் மேற்பட்ட விவசாயக் கிராமங்களில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

இந்த குடும்பங்களுக்கான அடிப்படை வசதிகள் இன்மை காரணமாக குறித்த  கிராம மக்கள் வேறு தேவைகளுக்காக பல்வேறு பிரதேசங்களுக்கும் செல்லவேண்டியுள்ளது.

இந்த நிலையில் குறித்த பிரதேசத்தின் பிரதான வீதியாக காணப்படுகின்ற வீதிகள் இதுவரை உரிய முறையில் புனரமைக்கப்படாமை மற்றும் போக்குவரத்து வசதிகள் இன்மை காரணமாக தாங்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளோம் என  கிராம மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே தங்கள் கிராமங்களுக்கான பிரதான வீதியை புனரமைத்து போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...