mahindananda aluthgamage
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

வடக்கு இளைஞர்களுக்காக அரை ஏக்கர் நிலத்தை வழங்கத் தயார்- மஹிந்தானந்த அளுத்கமகே

Share

மிளகாய் உற்பத்தியில் ஈடுபட விருப்பமுள்ள வடக்கிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க முடியுமென விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விவசாயத்தில் ஈடுபடுவதற்கு வடக்கு இளைஞர்கள் அக்கறை காட்டினார்கள் என்றால், உதவிகளை வழங்குவதற்கு தான் தயாராக இருப்பதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புபட்டு, புனர்வாழ்வளிக்கப்பட்ட சிலர், விவசாயத்துறை அமைச்சரை, சந்தித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விவசாயம் செய்வதற்கு ஆர்வமுள்ள வடக்கு இளைஞர்களுக்காக அரை ஏக்கர் நிலத்தை வழங்கவும் அதற்கு தேவையான உரம், நீர், கிருமிநாசினிகள் உள்ளிட்டவைகளை தமது அமைச்சு ஊடாக பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும், வட மாகாணத்தில் விவசாயத்துறையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்பும் போது, புனர்வாழ்வளிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் தகுதிகளுக்கு ஏற்ப முன்னுரிமை அளிக்கவும் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...