WhatsApp Image 2022 02 03 at 3.58.20 PM
செய்திகள்அரசியல்இந்தியா

தேர்தலை எதிர்கொள்ளத் தயார்! – மருதபாண்டி ராமேஸ்வரன்

Share

” எந்தவொரு தேர்தல் நடத்தப்பட்டாலும் அதனை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும், அரசும் தயாராகவே இருக்கின்றன. அதேபோல எமது ஆட்சியின்கீழ் மலையகத்துக்கான அபிவிருத்திகள் வேகமாக முன்னெடுக்கப்படும்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக, நாடு முழுவதிலுள்ள கிராம சேவகர் பிரிவுகளில் இன்று புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் சுபநேரத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

மிகவும் நெருக்கடியான சூழ்நிலையிலேயே எமது அரசு, இந்த நாட்டை பொறுப்பேற்றது. பல சிரமங்கள் இருந்தாலும் அபிவிருத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை. தேவையான நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டன. இன்றும் அதே வேகத்தில் செயற்படுகின்றோம். எனவே, அபிவிருத்தி திட்டங்கள் வெற்றியளிக்க மக்கள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.

கொரோனா வைரஸால் நாட்டு பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. எமது நாட்டில் மட்டுமல்ல உலகளவில் இந்த நிலைமையே காணப்படுகின்றது. இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுவருகின்றன.

அதேவேளை, மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது எமது தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராக இருந்தார். பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை அவர் மலையகத்துக்கு கொண்டுவந்தார். தற்போது கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கின்றார். எமது பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானின் அமைச்சின் ஊடாகவும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அந்த வகையில் நாடு விரைவில் மீளும் என நம்புகின்றோம்.

அடுத்து எந்தத் தேர்தல் நடத்தப்பட்டாலும் அதனை எதிர்கொள்வதற்கு காங்கிரசும், அரசும் தயாராகவே இருக்கின்றன. அது ஜனாதிபதித் தேர்தலாக இருக்கட்டும், பொதுத் தேர்தலாக இருக்கட்டும், மாகாணசபைத் தேர்தலாக இருக்கட்டும். உள்ளாட்சி மன்றத் தேர்தலாக இருக்கட்டும். சவாலை எதிர்கொள்ள நாம் தயார்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....