mahintha.....
செய்திகள்அரசியல்இலங்கை

நாளையே வெளியேறத் தயார்! – மஹிந்த அமரவீர

Share

“அரசிலிருந்து வெளியேறுவதற்கு கட்சி முடிவெடுத்தால் பதவிகளை துறந்துவிட்டு, நாளையே வெளியேறுவதற்குத் தயார்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசிலிருந்து வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுவரும் கருத்துகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு அறிவித்துள்ளார்.

” உரப் பிரச்சினை மற்றும் அதிபர், ஆசிரியர்களின் போராட்டம் ஆகியவை தொடர்பில் நாம் விமர்சனங்களை முன்வைத்தோம். இது சிலருக்கு வலித்திருக்கலாம். இதனால் அரசியிலிருந்து வெளியேறி விமர்சனங்களை முன்வைக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

எமது கட்சி தீர்மானித்தால் பதவிகளை துறந்துவிட்டு நாளையே வெளியேறுவதற்கு நாம் தயார். எனினும், அத்தகையதொரு முடிவை கட்சி இன்னும் எடுக்கவில்லை. நாடு தொடர்பில் நாம் அதிகம் சிந்திப்பதாலேயே பொறுமைகாத்து வருகின்றோம்.

அரசிலிருந்து வெளியேறிய பிறகு நாம் எங்கு செல்வது? சஜித்துக்கு பின்னால்சென்று, கைப்பாவையான அவரை ஜனாதிபதியாக்குவதா என்ற பிரச்சினை எமக்கு உள்ளது. அதேபோல தோல்வியடைந்த தலைவரான ரணிலை மீண்டும் பலப்படுத்துவதா என்ற பிரச்சினையும் உள்ளது.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...