Shehan Semasinghe
செய்திகள்இலங்கை

வீதிகள் துரித அபிவிருத்தி! – இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

Share

விவசாயம் செய்யப்பட்டு வரும் பிரதேச வீதிகள், வைத்தியசாலைகள் பாடசாலைகளுக்கு உட்பிரவேசிக்கும் மற்றும் அவைகளுக்கு அருகில் உள்ள வீதிகள் அனைத்திற்கும் முன்னுரிமை வழங்கப்பட்டு நெடுஞ்சாலை அமைச்சு ஊடாக துரித அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

செளபாக்யா எதிர்கால கொள்கை பிரகடன திட்டத்திற்கமைய “முன்னுரிமை வீதி” அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் பிரதேச வீதிகள் அபிவிருத்தி செய்யப்படும் தேவைகள் உணரப்பட்டு இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த வீதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்த் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைய இத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பிரதேச வீதிகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் விவசாய மக்கள் தங்களின் உற்பத்திகளை தாமதமின்றி பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்ல முடியும்.

அதன் மூலம் விவசாய மக்கள் பொருளாதாரத்தை இலகுவில் விருத்தி செய்து கொள்ள முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...