IMG 20220302 WA0001
செய்திகள்அரசியல்இலங்கை

ரஞ்சன் விவகாரம்! – சர்வதேச நாடாளுமன்றை நாடுகிறது எதிரணி

Share

ரஞ்சன் ராமநாயக்க விவகாரம் தொடர்பில் சர்வதேச நீதிமன்றம் மற்றும் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் ஆகியவற்றிடமும் முறையிடப்படும் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்றுவருகின்றது.

இந்நிலையில் இலங்கையில் சிறை தண்டனை அனுபவித்துவரும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுச நாணயக்கார ஆகியோர் ஜெனிவா சென்றுள்ளனர்.

ஜெனிவாவில் வைத்து இருவரும் வெளியிட்டுள்ள காணொளிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

” ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. அவரின் மனித உரிமை மீறப்பட்டுள்ளது. இது தொடர்பில் மனித உரிமைகள் பேரவை மற்றும் ஜெனிவா வந்துள்ள வெளிநாட்டு தூதுவர்களுக்கு தெளிவுப்படுத்தப்படும்.

அத்துடன், சர்வதேச நீதிமன்றம் மற்றும் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் ஆகியவற்றிடமும் முறையிடப்படும். மேற்படி அமைப்புகளுடன் இலங்கைக்கு உடன்படிக்கைகள் உள்ளன. எனவே, அதன்பிரகாரம் செயற்பட வேண்டிவரும். ரஞ்சனுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதே எமது இலக்கு.” – என்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...