மோடி ராகுல்
அரசியல்இந்தியாசெய்திகள்

பொறுப்பைத் தட்டிக்கழிக்கின்றார் மோடி! – ராகுல் குற்றச்சாட்டு

Share

பெற்றோல், டீசல் வரி குறைப்பு விவகாரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பொறுப்பைத் தட்டிக்கழிப்பதாக ராகுல் காந்தி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

பெற்றோல், டீசல் மீதான ‘வட்’ வரியைக் குறைக்குமாறு, மாநில அரசுகளைப் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ‘ருவிட்டர்’ பக்கத்தில் கருத்துத் தெரிவித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“எரிபொருள் விலை உயர்வுக்கு மாநிலங்கள் மீது பழி போடுகின்றது. நிலக்கரி தட்டுப்பாட்டுக்கும் மாநிலங்கள் மீது பழி போடுகின்றது. ஒட்சிசன் தட்டுப்பாட்டுக்கும் மாநிலங்கள் மீது பழி போடுகின்றது.

எரிபொருள் மீதான வரிகளில், 68 சதவீதத்தை மத்திய அரசுதான் எடுத்துக்கொள்கின்றது. இருப்பினும், பிரதமர் மோடி பொறுப்பைத் தட்டிக்கழிக்கின்றார். அவரது கூட்டாட்சி தத்துவம், ஒத்துழைப்பானது அல்ல, நெருக்கடி கொடுக்கக்கூடியது” – என்று குறிப்பிட்டுள்ளார்.

#IndianNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
vijay sad
இந்தியா

முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு திமுக பதிலடி !

கரூருக்கு சென்ற தமிழக முதல்வர் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்வில், திமுகவை குறித்து கடுமையான விமர்சனங்களினை...

friends drinking
இந்தியா

தமிழ் நாட்டில் மது அருந்தும் பெண்கள் இத்தனை பேரா?

  இந்திய மாநில அரசுகளுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக மது உள்ளதுடன், மதுபானங்களுக்கு ஜிஎஸ்டி இல்லை...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...