basil
செய்திகள்அரசியல்இலங்கை

பொதுச் சேவை நாட்டுக்கு சுமை! – கூறுகிறார் பஸில்

Share

அரசின் பொதுச் சேவை என்பது நாட்டுக்கு பெரும் சுமை. இதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். – இவ்வாறு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

நேற்றையதினம் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொது சேவைக்காக பணத்தை செலவழிக்கவோ, அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ முடியாது.

விதிக்கப்படவுள்ள வர்த்தக பொருள்கள் மற்றும் சேவை வரிகள் திட்டம் எந்தவோர் அத்தியாவசிய பொருள்களுக்கும் விதிக்கப்படவில்லை. மதுபானம் போன்ற பொருள்களுக்கே வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டில் வரிக்கொள்கையானது அடிக்கடி மாற்றம் செய்யப்படாது நிலையாகப் பேணப்பட வேண்டும். இதுவே எமது நிலைப்பாடாகும். அடிக்கடி வரி விதிப்பில் மாற்றம் ஏற்படுத்தும் போது அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். ஒரு வரிக்கொள்கையானது குறைந்தது மூன்று வருடங்களுக்காவது நடைமுறையில் பேணப்பட வேண்டும்.

விதிக்கப்படவுள்ள புதிய வரிக்கொள்கை தொடர்பில் விரைவில் அனைவருக்கும் அறியத்தருவோம் – என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...