basil
செய்திகள்அரசியல்இலங்கை

பொதுச் சேவை நாட்டுக்கு சுமை! – கூறுகிறார் பஸில்

Share

அரசின் பொதுச் சேவை என்பது நாட்டுக்கு பெரும் சுமை. இதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். – இவ்வாறு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

நேற்றையதினம் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொது சேவைக்காக பணத்தை செலவழிக்கவோ, அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ முடியாது.

விதிக்கப்படவுள்ள வர்த்தக பொருள்கள் மற்றும் சேவை வரிகள் திட்டம் எந்தவோர் அத்தியாவசிய பொருள்களுக்கும் விதிக்கப்படவில்லை. மதுபானம் போன்ற பொருள்களுக்கே வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டில் வரிக்கொள்கையானது அடிக்கடி மாற்றம் செய்யப்படாது நிலையாகப் பேணப்பட வேண்டும். இதுவே எமது நிலைப்பாடாகும். அடிக்கடி வரி விதிப்பில் மாற்றம் ஏற்படுத்தும் போது அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். ஒரு வரிக்கொள்கையானது குறைந்தது மூன்று வருடங்களுக்காவது நடைமுறையில் பேணப்பட வேண்டும்.

விதிக்கப்படவுள்ள புதிய வரிக்கொள்கை தொடர்பில் விரைவில் அனைவருக்கும் அறியத்தருவோம் – என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...