bus 720x375 1
செய்திகள்இலங்கை

மாகாண போக்குவரத்து மீள ஆரம்பம்!

Share

கொரோனாத் தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதனடிப்படையில், எதிர்வரும் 21ஆம் திகதி முதல் இப் போக்குவரத்து சேவையை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 21ஆம் திகதி மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தின்படி மாகாணங்களுக்கு இடையில் பேருந்து மற்றும் ரயில் சேவைகளை ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கும்.

விரைவில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த நிலையில், பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மாணவர்களுக்காக விசேட பேருந்து சேவையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளோம் – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 14
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை: மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை...

17 13
இலங்கைசெய்திகள்

நான்கு தமிழ் இளைஞர்கள் பரிதாப மரணம்

புத்தளம் (Puttalam) மாவட்டம், வென்னப்புவ கடலில் மூழ்கி நால்வர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். மேற்படி நால்வரும் குளித்துக்...

19 13
இலங்கைசெய்திகள்

இறம்பொட கோர விபத்து : 23ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

கொத்மலை, ரம்பொட கரண்டியெல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி நடந்த பேருந்து விபத்தில் படுகாயமடைந்து...

18 13
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்

கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 240,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. இன்று...