wimal
செய்திகள்இலங்கை

‘மாகாணசபை இந்தியாவின் குழந்தை’ – பிறப்பு சான்றிதழ் வழங்கினார் விமல்!

Share

“மாகாணசபை முறைமை என்பது இந்தியாவின் குழந்தையாகும். எனவே, அக் குழந்தை உயிருடன் இருக்கவேண்டும் என்பதையே அந்நாடு விரும்புகின்றது. அதனால்தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.” – என்று அமைச்சர் விமல் வீரவன்ச இன்று தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இந்தியா விசேடமாக அழுத்தம் எதனையும் பிரயோகிக்கவில்லை. வழமைபோல கோரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று முழுமையாக நீங்கவில்லை. நாட்டு மக்கள் நிவாரணத்துக்காக காத்திருக்கின்றனர்.

எனவே, தற்போதைய சூழ்நிலையில் மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுப்பது அவசியமா அல்லது தேர்தல் முக்கியமா என சிந்தித்து பார்க்க வேண்டும். மக்களுக்கு நன்மை பயக்கும் விடயங்களுக்கு முன்னுரிமை – முதலிடம் வழங்கப்பட வேண்டும்.”- என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...