dfdf
செய்திகள்இலங்கை

மார்ச் மாதத்துக்கு முன் மாகாண சபை தேர்தல் – பஸில் அறிவிப்பு

Share

மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும். அதன்படி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்பாக மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசு தீர்மானித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார செயலர், ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் பஸில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரசியல் கட்சிகளை தனித்தனியே சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.

இந்த நிலையில் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேர்தல் முறைமைகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான நாடாளுமன்ற தெரிவுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கருத்து வெளியிட்ட நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச மாகாண சபைத் தேர்தலை உடனடியாக எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன் நடத்த அரசு தீர்மானித்துள்ளது.

இதற்கான தேர்தல்கள் சட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டிய தேவை உள்ளது. இந்த விடயத்துக்கு சில வேளையில் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு தேவைப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மூன்றில் இரண்ட பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கட்டாயம் அல்ல. இது தொடர்பில் தனிநபர் சட்டமூலம் ஒன்றை சமர்ப்பித்திருக்கிறேன்.

இந்த சட்டமூலத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு , ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி என அனைத்து கட்சிகளும் ஆதரவளிப்பதால் முழு நாடாளுமன்ற ஆதரவோடு சட்டம் நிறைவேற்றலாம் என்று தெரிவித்துள்ளார்.

சுமந்திரன் எம். பியின் கருத்தை சட்ட மா அதிபரின் பிரதிநிதி, அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...