Economic
செய்திகள்அரசியல்இலங்கை

பொருளாதார உடனடி தீர்வு வழங்குக! – அரசிடம் கோரிக்கை

Share

நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உடனடியாக நிரந்தர தீர்வை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் விசேட கூட்டறிக்கையொன்றை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரச பங்காளிக்கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் கூட்டறிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர்.

மேலும் சில எம்.பிக்களும் அதில் கைச்சாத்திட்டுள்ளனர்.

கூட்டறிக்கையின் பிரகாரம் , தற்போதைய பொருளாதார நெருக்கடியில் நாடு எதிர்கொள்ளும் நான்கு முக்கிய சவால்களை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

01. 2020 ஏப்ரலில் இருந்து சர்வதேச இறையாண்மைப் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் சர்வதேச நிதிச் சந்தைகளில் இருந்து இலங்கை கடன் பெறுவதற்கான வாய்ப்புகளை இழந்தமையே இதன் மையக்கருமாகும்.

02. இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு மாதாந்தம் தேவையான இறக்குமதிக்குக் கூட போதுமானதாக இல்லாத காரணத்தினால், சுதந்திரத்திற்குப் பின்னர் மிகக் குறைந்த அந்நியச் செலாவணியை நாடு கொண்டுள்ளது.

03. 2020 ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட அரசாங்க வருவாயில் 70% கடன் வட்டி செலவினம் இதுவரை பதிவுசெய்யப்பட்ட மிக உயர்ந்த கடன் வட்டி விகிதமாகும்.

04. கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மொத்த பொதுக் கடனை 95 சதவீதம் முதல் 120 சதவீதம் வரை உயர்த்திய நான்கு காரணிகள் இவை.

மேற்கூறியவை மிகப்பெரிய பொருளாதார சவாலை பிரதிபலிக்கிறது என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...