galewela
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசம் சுற்றிவளைப்பு! – இயந்திரங்களுடன் ஐவர் கைது

Share

கலேவெல பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசத்தில்  சட்டவிரோதமாக இயங்கிவந்த  கல் குவாரியை தம்புள்ளை விசேட அதிரடி படையினர் இன்று  சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது 60 மில்லியன் பெறுமதியான இயந்திரங்களை விசேட அதிரடி படையினர் சுற்றிவளைத்ததுடன், சந்தேகநபர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள்  அனுமதிப்பத்திரத்துடன் கல் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களது அனுமதிப்பத்திரம் காலாவதியான பின்னரும் உரிமம் புதுப்பிக்கப்படவில்லை எனவும் விசேட அதிரடி படையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த இடத்தில் உரிமம் புதுப்பிக்கப்படாமல் குவாரி இயங்கி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தப்பட்டது.

நான்கு அகழ்வாராய்ச்சி இயந்திரங்கள் மற்றும் ஒரு டிப்பர் வாகனங்கள் இதன்போது மீட்கப்பட்டது.  உள்ளதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இந்த இயந்திரங்களின் உதவியுடன் கற்கள் மற்றும் மண்ணை அகற்றி வருவதாகவும் விசேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.

இரண்டு கல்குவாரிகளும் தம்புள்ளை பகுதியில் உள்ள வர்த்தகர்கள் இருவருக்கு சொந்தமானது என விசேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.

பிரதான வீதியில் இருந்து 200-300 மீற்றர் தூரத்தில் குவாரி அமைந்திருந்ததாக விசேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...