galewela
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசம் சுற்றிவளைப்பு! – இயந்திரங்களுடன் ஐவர் கைது

Share

கலேவெல பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசத்தில்  சட்டவிரோதமாக இயங்கிவந்த  கல் குவாரியை தம்புள்ளை விசேட அதிரடி படையினர் இன்று  சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது 60 மில்லியன் பெறுமதியான இயந்திரங்களை விசேட அதிரடி படையினர் சுற்றிவளைத்ததுடன், சந்தேகநபர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள்  அனுமதிப்பத்திரத்துடன் கல் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களது அனுமதிப்பத்திரம் காலாவதியான பின்னரும் உரிமம் புதுப்பிக்கப்படவில்லை எனவும் விசேட அதிரடி படையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த இடத்தில் உரிமம் புதுப்பிக்கப்படாமல் குவாரி இயங்கி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தப்பட்டது.

நான்கு அகழ்வாராய்ச்சி இயந்திரங்கள் மற்றும் ஒரு டிப்பர் வாகனங்கள் இதன்போது மீட்கப்பட்டது.  உள்ளதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இந்த இயந்திரங்களின் உதவியுடன் கற்கள் மற்றும் மண்ணை அகற்றி வருவதாகவும் விசேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.

இரண்டு கல்குவாரிகளும் தம்புள்ளை பகுதியில் உள்ள வர்த்தகர்கள் இருவருக்கு சொந்தமானது என விசேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.

பிரதான வீதியில் இருந்து 200-300 மீற்றர் தூரத்தில் குவாரி அமைந்திருந்ததாக விசேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...