sittharethen 1 720x375 1
செய்திகள்இலங்கை

புலிகளை விசாரணைக்கு உட்படுத்துவது போராட்டத்தை இழிவுபடுத்துவதாகும்! – சித்தார்த்தன்

Share

தமிழீழ விடுதலைப் புலிகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பது ஒட்டுமொத்த போராட்டத்தையும் இழிவுபடுத்தும் செயற்பாடாகும்,

இவ்வாறு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியாகவோ அல்லது கொள்கை ரீதியாகவோ எச் சந்தர்ப்பத்திலும் நாம் ஒருவரையொருவர் காட்டிக்கொடுக்க மாட்டோம். இதில் நாம் மிகத் தெளிவோடு இருக்கிறோம்.

விடுதலைப்புலிகளை விசாரியுங்கள் என்று கூறினாலே அவர்கள் போராடியது பிழை என்பது இவர்களின் நிலைப்பாடு. அது இயக்க போராட்டமல்ல.

ஒரு சில தமிழ் மக்களை தவிர, மிகுதி ஒட்டுமொத்த தமிழர்களும் இந்த விடுதலை போராட்டத்தை ஆதரித்தனர், அதில் சிறுசிறு தவறுகள் நடந்திருந்தாலும் அது மக்களின் போராட்டம்.

அத்தோடு கூட்டமைப்பை விட்டு விலகுகிறோம் என நாம் எப்பொழுதும் கூறியதில்லை , . தமிழ் மக்களுடைய பலத்தை உடைக்கும் நிலையை நாம் எடுக்க மாட்டோம்” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...