Ali Sabry2
செய்திகள்அரசியல்இலங்கை

“போதைக்கைதிகள் சமூகத்திற்கு” திட்டம் ஆரம்பம்!!!

Share

போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள கைதிகளை சமூகத்துடன் இணைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை வீரவிலை திறந்தவெளி சிறைச்சாலையின் பணிகளை பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

போதைப்பொருளுக்கு அடிமையாகி தண்டனை அனுபவிக்கும் சிறைக் கைதிகள் விசேட புனர்வாழ்வளிப்பு நிலையத்தில் சேர்க்கப்பட்டு சமூகமயப்படுத்தி, நாட்டிற்கு நல்ல பிரஜைகளாக மாற்றி புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்படவுள்ளனர்.

போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர்களை புனர்வாழ்வளிக்கும் நிலையம் ஸ்தாபிக்கப்பட்டு சகல வசதிகளுடனும் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது.

தற்போதைய அரசாங்கம் போதைப் பொருளுக்கு அடிமையாகி சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வருபவர்களை புனர்வாழ்வளித்து சமூகத்திற்கு ஏற்றாற்போல் மாற்றியமைக்கும் திட்டத்தை பலகோடி ரூபாக்களை செலவு செய்து செயற்படுத்தப்படுகின்றது என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...