சீனாவில் குழந்தைகளுக்கு வீட்டுப் பாடங்களை வழங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளை மன அழுத்தத்திலிருந்து பாதுகாக்க வீட்டுப்பாடங்கள் மற்றும் விசேட வகுப்புகள் உள்ளிட்ட நடைமுறைகளுக்கு தடை விதிக்கும் வகையிலான சட்டவரைவை சீன அரசு தயாரித்துள்ளது.
அண்மைக்காலமாக, குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரையிலானோருக்கு மன ஆரோக்கியத்தை பாதிக்கும் வகையிலான செயல்பாடுகளை சீனா தடை செய்து வருவதுடன், குழந்தைகள் ஒன்லைன் விளையாட்டுகளை வாரத்திற்கு 3 மணி நேரங்கள் மட்டுமே விளையாடுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை குழந்தைகள் இணையதளங்களில் அதிக நேரம் செலவழிப்பதைத் தடுப்பதற்கும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதிலும், குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருப்பதிலும் அதிக கவனம் செலுத்தவேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சட்டவரைவு தயாரிப்புப் பணி முழுமையடைய உள்ள நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#World
Leave a comment