Vijitha Herath
செய்திகள்அரசியல்இலங்கை

பணத்தை அச்சிட்டு வழங்குவதால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை! – விஜித ஹேரத்

Share

” பணத்தை அச்சிட்டு 5 ஆயிரம் ரூபா வழங்குவதன்மூலம் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. அது பொருளாதார நெருக்கடியை மேலும் வலுப்படுத்தும்.” – என ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் எம்.பி. தெரிவித்தார்.

” நாட்டில் தற்போது பொருட்களின் விலைகள் உச்சம் தொட்டுள்ளன. பச்சை மிளகாயின்விலைகூட ஆயிரம் ரூபாவை தாண்டியுள்ளது. இந்நிலையில் 5 ஆயிரம் ரூபாவை வைத்து என்ன செய்வது? காசு இருந்தாலும் சமையல் எரிவாயு வாங்க முடியுமா?

டிசம்பர் 29 ஆம் திகதி இந்த அரசு பணம் அச்சிட்டது. அதனைதான் பகிர்ந்துவருகின்றது. மக்களுக்கு வருமானம் இல்லை, நாட்டில் உற்பத்தி இல்லை. இவற்றுக்கு உரிய தீர்வை தேடாமல் பணத்தை அச்சிட்டு வழங்குவதில் பயனில்லை.” – என்றும் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

” அதேவேளை, பணத்தை அச்சிட்டே அதனை நாட்டு மக்களுக்கு அரசு வழங்குகின்றது. அரசியல் தீர்மானம் பொருளாதாரத்துக்கு தீர்வு அல்ல. ” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

19 14
இலங்கை

உள்ளூராட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ரணிலை சந்தித்த எதிர்க்கட்சிகள்

உள்ளூராட்சி மன்றங்களின் கூட்டு நிர்வாகத்தை அமைப்பது குறித்து விவாதிக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும்...