Gtta and TNA
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதி – கூட்டமைப்பினர் 15 இல் சந்திப்பு!

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் 15 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்ற பின்னர், அவருடன் பேச்சு நடத்துவதற்கான கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்திருந்தது. அதன்பின்னரும் சில தடவைகள் ஊடகங்கள் வாயிலாகவும் சந்திப்புக்கு நேரம் கோரப்பட்டது.

எனினும், ஜனாதிபதி தரப்பில் இருந்து நேரம் ஒதுக்கப்படவில்லை. இரு தடவைகள் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும் இறுதி நேரத்தில் சந்திப்பு பிற்போடப்பட்டது.

இந்நிலையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து, ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையிலேயே சந்திப்புக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...