power1
செய்திகள்இலங்கை

வழமைக்குத் திரும்பியது மின் விநியோகம்!

Share

நாட்டின் பல பகுதிகளில் தடைப்பட்டிருந்த மின் விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ள நிலையில்,சில பகுதிகளில் இன்னும் சீராக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் பரவலாக இன்று காலை முதல் திடீர் மின்தடை ஏற்பட்ட நிலையில், மாலை 4.30 மணிக்கு பின்னரே மின்விநியோகம் பகுதி பகுதியாக சீர்செய்யப்பட்டு வருகிறது.

திடீர் மின்தடை ஏற்பட்ட நிலையில், மக்கள் கடும் அசெளகரியங்களுக்கு உள்ளாகினர்.

குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் பிற்பகலுக்கு பின்னர் நீர் விநியோகம் தடைப்பட்டிருந்தது.

மின்சார தடை காரணமாக ரயில் தண்டவாளங்களின் சமிக்ஞை விளக்குகள் செயலிழந்து காணப்பட்டன. இதனால் கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படவேண்டிய ரயில்கள் தாமதமடைந்தன.

தொலைத்தொடர்பு வரிசைகள் செயலிழந்து காணப்பட்டதுடன், சீரின்றியும் காணப்பட்டன.

நாட்டின் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் எரிபொருளுக்காக வரிசையில் நின்றமையையும் காணக்கூடியதாக இருந்தது.

இந்த நிலையில், தற்போது மின்விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள இலங்கை மின்சார சபை , துணை மின் நிலையங்களின் ஊடாக 1000 மெஹாவோட் மின்சாரம், தேசிய மின் தொகுதிக்குள் இன்று மாலை 4.30க்கு இணைக்கப்பட்டுள்ளது எனவும் அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம், தற்போது முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாகவும் அறிவித்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...