power1
செய்திகள்இலங்கை

வழமைக்குத் திரும்பியது மின் விநியோகம்!

Share

நாட்டின் பல பகுதிகளில் தடைப்பட்டிருந்த மின் விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ள நிலையில்,சில பகுதிகளில் இன்னும் சீராக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் பரவலாக இன்று காலை முதல் திடீர் மின்தடை ஏற்பட்ட நிலையில், மாலை 4.30 மணிக்கு பின்னரே மின்விநியோகம் பகுதி பகுதியாக சீர்செய்யப்பட்டு வருகிறது.

திடீர் மின்தடை ஏற்பட்ட நிலையில், மக்கள் கடும் அசெளகரியங்களுக்கு உள்ளாகினர்.

குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் பிற்பகலுக்கு பின்னர் நீர் விநியோகம் தடைப்பட்டிருந்தது.

மின்சார தடை காரணமாக ரயில் தண்டவாளங்களின் சமிக்ஞை விளக்குகள் செயலிழந்து காணப்பட்டன. இதனால் கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படவேண்டிய ரயில்கள் தாமதமடைந்தன.

தொலைத்தொடர்பு வரிசைகள் செயலிழந்து காணப்பட்டதுடன், சீரின்றியும் காணப்பட்டன.

நாட்டின் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் எரிபொருளுக்காக வரிசையில் நின்றமையையும் காணக்கூடியதாக இருந்தது.

இந்த நிலையில், தற்போது மின்விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள இலங்கை மின்சார சபை , துணை மின் நிலையங்களின் ஊடாக 1000 மெஹாவோட் மின்சாரம், தேசிய மின் தொகுதிக்குள் இன்று மாலை 4.30க்கு இணைக்கப்பட்டுள்ளது எனவும் அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம், தற்போது முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாகவும் அறிவித்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...