water foll
செய்திகள்இலங்கை

ஆபாச காணொலி – இளைஞனுக்கு தொற்று உறுதி!

Share

இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை, பெலிஹுல் ஓயா பகுதியில் அமைந்துள்ள பஹன் துடாவ நீர்வீழ்ச்சியை பின்னணியாக கொண்டு, அதன் அருகே ஆபாச காணொலியை தயார்செய்து இணையத்தில் பதிவேற்றியுள்ள ஜோடியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவர்கள் இருவரையும் குற்ற புலனாய்வுப் பிரிவினர் நேற்று மாலை கைதுசெய்துள்ளனர்.

குறித்த ஆண் மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதானவர் என்றும் பெண் காலியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என்றும் தெரியவருகிறது.

இந்த நிலையில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் குறித்த இளைஞனுக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த இளம் பெண் அழகுக்கலை நிபுணர் எனவும் இவர்கள் ஏற்கனவே இவ்வாறான ஆபாச காணொலிகளை தயார்செய்து பதிவேற்றியுள்ளமை விசாரணையில் தெரியவருகிறது.

இலங்கை சட்டத்தின்படி ஆபாச காணொலிகள் தயாரிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...