118379347 f959b3bf db0b 4dc9 822e 64a7ea6170e0
செய்திகள்இலங்கை

சிறுவர்களுக்கு பைஸர்- இம் மாதம் ஆரம்பம்1

Share

நாட்டில் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த நடவடிக்கைக்கான திட்டமிடல் அறிக்கை, இலங்கை சிறுவர் நோய் விசேட வைத்தியர்கள் சங்கத்தால் சுகாதார அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், பல்வேறு நோய் நிலைமைகளால் பாதிக்கப்பட்ட 12 வயதுக்கு மேற்பட்ட சுமார் 30 ஆயிரம் சிறுவர்களுக்கு இம் மாதமே பைஸர் தடுப்பூசி வழங்கப்படுதல் இத் திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கை என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் ஒக்டோபர் மாத ஆரம்பத்தில், க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள 6 லட்சத்து 46 ஆயிரம் மாணவர்களுக்கும், உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள 4 லட்சத்து 21 ஆயிரம் மாணவர்களுக்கும் பைஸர் தடுப்பூசி செலுத்துவது இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டமாகும்.

அத்துடன், எதிர்வரும் ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட ஏனைய சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...

நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...

veppam 2
இலங்கை

இன்றைய நாளில் இலங்கையில் உச்சம் தொட்ட வெப்பநிலை.

இன்றைய தினம் நாட்டின் அதி உச்ச வெப்பநிலையாக திருகோணமலை வளிமண்டலவியல் மையத்தில் 39.9 டிகிரி செல்சியஸாகப்...