118379347 f959b3bf db0b 4dc9 822e 64a7ea6170e0
செய்திகள்இலங்கை

சிறுவர்களுக்கு பைஸர்- இம் மாதம் ஆரம்பம்1

Share

நாட்டில் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த நடவடிக்கைக்கான திட்டமிடல் அறிக்கை, இலங்கை சிறுவர் நோய் விசேட வைத்தியர்கள் சங்கத்தால் சுகாதார அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், பல்வேறு நோய் நிலைமைகளால் பாதிக்கப்பட்ட 12 வயதுக்கு மேற்பட்ட சுமார் 30 ஆயிரம் சிறுவர்களுக்கு இம் மாதமே பைஸர் தடுப்பூசி வழங்கப்படுதல் இத் திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கை என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் ஒக்டோபர் மாத ஆரம்பத்தில், க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள 6 லட்சத்து 46 ஆயிரம் மாணவர்களுக்கும், உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள 4 லட்சத்து 21 ஆயிரம் மாணவர்களுக்கும் பைஸர் தடுப்பூசி செலுத்துவது இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டமாகும்.

அத்துடன், எதிர்வரும் ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட ஏனைய சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...