Udaya.jpg
செய்திகள்இலங்கை

வெறும் 10 நாட்களுக்கே பெற்றோல்! – வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில

Share

நாட்டில் 10 நாட்களுக்கு மட்டுமே பெற்றோல் கையிருப்பில் உள்ளது என வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நேற்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளமை உண்மையே. இதற்கு தற்போதைய அரசு மட்டும் பொறுப்பல்ல. நாட்டை ஆட்சி சித்த அனைவருமே இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள்.

தற்போது நாட்டில் டொலர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் எரிபொருளை இறக்குமதி செய்வதில் மிகப்பெரும் சிக்கலை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

தற்போதைய நிலையில் ‘பெட்ரோல் – 92’ பத்து நாட்களுக்கும், ‘பெட்ரோல் 95’ நாற்பது நாட்களுக்கும், டீசல் எட்டு நாட்களுக்கும், சூப்பர் டீசல் எட்டு நாட்களுக்குமே கையிருப்பில் உள்ளன. மேலும் 6 நாட்களுக்கு தேவையான டீசல் தற்போது இறக்குமதி செய்யப்படவுள்ளது.

இதேவேளை, அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு ஆயிரத்து 285.50 மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுகிறது. இந்த நிதியை பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறுவதாக யாழ். உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக...

31 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின்...

6 19
இலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக...

19 12
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்...