வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் வெளியான தகவல்!

இரண்டாம் இணைப்பு

கிளிநொச்சி- பரந்தன் சிவபுரம் பிரதேசத்தில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம் முத்தையா கேதீஸ்வரன் (27) என்ற ஒரு பிள்ளையின் தந்தை என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலைக்கு தனிப்பட்ட முரண்பாடுகளே காரணமாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலத்தை கிளிநொச்சி மாவட்ட நீதவான் பார்வையிட்ட பின்னர், பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

முதலாம் இணைப்பு

வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, பரந்தன் – சிவபுரம் பகுதியில், தற்காலிக கொட்டகைக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

Death 02

குறித்த சடலத்தை அவதானித்த அயலவர்கள், சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் சடலத்தை மீட்டனர்.

இதுதொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#SrilankaNews

Exit mobile version