Train
செய்திகள்இலங்கை

ரயில் சேவையை நாடும் மக்கள்! – கட்டணமும் அதிகரிக்கிறது

Share

பஸ் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மாற்றுவழி தேர்வை நோக்கி பயணிகள் நகர்வதை காணமுடிகின்றது.

தொழில் உட்பட இதர தேவைகளுக்காக இதுவரை காலமும் பஸ்களில் பயணித்தவர்கள்கூட, தற்போது ரயில் பயணத்தை தேர்ந்தெடுத்துள்ளனர் எனவும், இதனால் ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 40 வீதத்தால் அதிகரித்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, ரயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் ரயில்வே திணைக்களம் ஆலோசனை நடத்தி வருகின்றது.

போக்குவரத்தில் ஈடுபடும் ரயில்களின் பெட்டிகளை அதிகரிப்பது தொடர்பிலும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஒரு கிலோமீற்றர் வரையில் பயணம் மேற்கொள்பவர்கள் தற்போது நடக்க ஆரம்பித்துள்ளனர் எனவும், சிலர் சைக்கிள்களை பயன்படுத்திவருவதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

ரயில் கட்டணமும் விரைவில் அதிகரிக்கப்படவுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...