Train
செய்திகள்இலங்கை

ரயில் சேவையை நாடும் மக்கள்! – கட்டணமும் அதிகரிக்கிறது

Share

பஸ் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மாற்றுவழி தேர்வை நோக்கி பயணிகள் நகர்வதை காணமுடிகின்றது.

தொழில் உட்பட இதர தேவைகளுக்காக இதுவரை காலமும் பஸ்களில் பயணித்தவர்கள்கூட, தற்போது ரயில் பயணத்தை தேர்ந்தெடுத்துள்ளனர் எனவும், இதனால் ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 40 வீதத்தால் அதிகரித்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, ரயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் ரயில்வே திணைக்களம் ஆலோசனை நடத்தி வருகின்றது.

போக்குவரத்தில் ஈடுபடும் ரயில்களின் பெட்டிகளை அதிகரிப்பது தொடர்பிலும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஒரு கிலோமீற்றர் வரையில் பயணம் மேற்கொள்பவர்கள் தற்போது நடக்க ஆரம்பித்துள்ளனர் எனவும், சிலர் சைக்கிள்களை பயன்படுத்திவருவதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

ரயில் கட்டணமும் விரைவில் அதிகரிக்கப்படவுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமாகமவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே மோதல்: 19 வயது இளைஞன் மரணம்; ஐவர் கைது!

ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில்...

world 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜும்ஆ பிரசங்கங்களின் போது நிதானத்தைப் பேணுமாறு உலமாக்களுக்கு அறிவுறுத்தல்!

நாட்டின் தற்போதைய சூழல் மற்றும் சர்வதேச விவகாரங்களைக் கருத்திற்கொண்டு, ஜும்ஆ பிரசங்கங்களின் போது கதீப்மார்கள் மற்றும்...

world 55
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஆரம்பம்: கொழும்பிலிருந்து 2,300 மேலதிக பேருந்துகள் சேவையில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக விசேட...

world 54
செய்திகள்இலங்கை

நெதன்யாகு மீதான ஊழல் வழக்கு மீண்டும் தொடக்கம்; ஈரானின் கடும் விமர்சனம்!

இஸ்ரேலில் ஈரான் உடனான போர் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த அவசரநிலை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...