kili01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மழையால் தற்காலிக வீடுகளில் வசிக்கின்ற மக்கள் பெரும் பாதிப்பு!

Share

தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில், தாழ் நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்காலிக வீடுகளில் வசிக்கின்ற மக்கள், பெரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துளளனர். அவர்களது வீடுகளுக்குள்ளும், மழை வெள்ளம் புகுந்துள்ளது.

கடந்த காலத்தில், நிரந்தர வீட்டுத் திட்டங்களுக்கு உள்வாங்கப்பட்டு, ஆரம்ப கட்டக் கொடுப்பனவுகள் மட்டும் வழங்கப்பட்டு, மிகுதி கொடுப்பனவுகள் வழங்கப்படாது, வீட்டுத் திட்டத்தை பூர்த்தி செய்ய முடியாதுள்ள மக்கள், நெருக்கடிகளை சந்தித்துள்ளனர்.

kili03

இந்த நிலையில், மாவட்டத்திலுள்ள குளங்களின் நீர் மட்டம், வெகுவாக அதிகரித்து வருகிறது. 10 அடி 6 அங்குலத்தை கொண்ட கனகாம்பிகைக்குளத்தில், 10 அடி 6.5 அங்குலத்திற்கு நீர் மட்டம் அதிகரித்தமையால், தற்போது வான் பாய ஆரம்பித்துள்ளது.

kili

அதனையடுத்து, வெள்ளம அனர்த்தம் ஏற்பட்டுள்ள பிரதேசங்களில், இராணுவத்தினர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...

Untitled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 6-ஆம் நாளில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள்...