jaffna 720x375 2
செய்திகள்இலங்கை

யாழ். மருத்துவபீடத்தில் மீண்டும் பி.சி.ஆர்.!

Share

யாழ். மருத்துவபீடத்தில் மீண்டும் பி.சி.ஆர்.!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த பி.சி.ஆர். பரிசோதனைகளை மீளவும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் பி.சி.ஆர் பரிசோதனைகளை உடனடியாக மேற்கொள்வதற்கான ஆளணியை நியமிக்க துணைவேந்தர் நடவடிக்கை மேற்கொண்டதை அடுத்து 3 பேர் பல்கலைக்கழக நிதிமூலத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் கொரோனா பி.சி.ஆர். ஆய்வுகூடத்தில் பணியாற்றிய 4 மருத்துவ ஆய்வுகூடத் தொழில்நுட்பவியல் பயிலுநர்கள் உள்ளகப் பயிற்சிக்கான நியமனம் பெற்றுச் சென்றதால்
பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஆளணி பற்றாக்குறை ஏற்பட்டது.

இதன் காரணமாக கடந்த மாத நடுப்பகுதியில் இருந்து யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் உடனடியாக பல்கலைக்கழக நிதியில் இருந்து தற்காலிகமாக தேவையான ஆளணியை உள்வாங்க துணைவேந்தர் பணித்திருந்தார்.

இதற்கமைவாக நேற்றையதினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற நேர்முகத் தேர்வில் மூன்று பேரை நியமிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே விரைவாக பி.சி.ஆர். பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 84
செய்திகள்உலகம்

இஸ்லாமாபாத்தில் சரித்திர முக்கியத்துவமிக்க பேச்சுவார்த்தை: ஜே.டி. வேன்ஸ் மற்றும் ஈரானியக் குழுவினரைச் சந்தித்தார் ஷெபாஸ் ஷெரீப்!

மத்திய கிழக்கில் கடந்த பெப்ரவரி 28 முதல் நீடித்து வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...