Parliament of Sri Lanka 04 850x460 acf cropped 1
செய்திகள்அரசியல்இலங்கை

சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம்!

Share

நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 18ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்றைய தினம் முக்கிய கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 18ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பாராளுமன்றத்தில் கொள்கை விளக்க உரையை நிகழ்த்தவுள்ள நிலையில் அதன் மீதான இரண்டு நாள் விவாதத்தை ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்‌ஷ்மன் கிரியெல்லவும் சபாநாயகரிடம் கோரியுள்ள நிலையில் அது தொடர்பில் இன்றைய பேச்சுவார்த்தையில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை எதிர்வரும் 19 மற்றும் 20ம் திகதிகளில் பெற்றுத் தருமாறு சபாநாயகரிடம் கோரப்பட்டுள்ள நிலையில் அதற்கான தீர்மானம் இன்று மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, மேற்படி விடயத்துக்கு மேலதிகமாக முக்கியமாக சில விடயங்கள் இந்த கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...