இந்தியாசெய்திகள்

தாலியைக் கழற்றி எறிந்து மகளை அழைத்துச்சென்ற பெற்றோர்: உயிரைவிட்ட காதலன்

marriage parents
Share

காதலிக்கு தாலி கட்டி மனைவியாக்கிய நிலையில் பொலிஸ் நிலையத்தில் வைத்து பிரிந்ததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்தியா- நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி சிவன் கீழவீதி பகுதியைச் சேர்ந்த அரவிந்த்குமாரும் (வயது 26) அதேபகுதியைச் சேர்ந்த சிவநந்தினி (வயது 22) என்பவரும் கடந்த 03 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர்.

வழமைபோன்று இவர்களது காதலுக்கும் இருவீட்டார் மத்தியில் எதிர்ப்பு ஏற்பட்டமையைத் தொடர்ந்து, வெளியூருக்குச் சென்று கோவிலில் தாலிக்கட்டி திருமணம் செய்து கொண்டனர்.

இந்தநிலையில் மகள் சிவநந்தினியை காணவில்லை என கடந்த 11ஆம் திகதி வேளாங்கண்ணி பொலிஸ் நிலையத்தில் பெண் வீட்டார் முறைப்பாடு ஒன்றினை வழங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து திருமணமான அரவிந்த்குமார் மற்றும் சிவநந்தினி ஆகியோர் கடந்த 19 ஆம் திகதி வேளாங்கண்ணி பொலிஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.

அப்போது பொலிஸ் நிலையத்தில் அரவிந்த்குமார் அவரது தாயார் விஜயலட்சுமி ஆகியோரை, பெண் வீட்டாரான சிவநந்தினியின் தந்தை ராஜேந்திரன், அவருடைய உறவினர்கள் மிரட்டி, தாலியைக் கழற்றி பொலிஸ் நிலையத்தில் வீசியதுடன், பெண்ணையும் அச்சுறுத்தி வீட்டிற்கு பெண் வீட்டார் அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்தநிலையில் காதலி பிரிந்த சோகத்தில் இருந்த அரவிந்த்குமார் தூக்கு போட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து பொலிஸார் மேலதிக விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே சிவனந்தினி கழுத்தில் கட்டப்பட்ட தாலி வேளாங்கண்ணி காவல் நிலைய வாசலில் வீசிய எறியப்பட்டு கிடக்கும் காட்சிகள், அரவிந்த்குமார் மற்றும் சிவநந்தினி ஆகியோர், தாலிக்கட்டி கோவிலில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், இரத்தத்தால் எழுதப்பட்ட காதல் கடிதங்கள் ஆகியவைகள் வெளியாகியுள்ளன.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...