Milk 750x375 1
செய்திகள்இலங்கை

200 ரூபாவால் அதிகரிக்கிறது பால்மா விலை!!!

Share

ஒரு கிலோ பால்மா விலையை 200 ரூபாவால் அதிகரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்புதலை வாழ்க்கைச் செலவுக் குழு வழங்கியுள்ளது என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இவ் விலை அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் டொலர் பற்றாக்குறை நிலவி வரும் காரணத்தால் பால்மா இறக்குமதியாளர்கள் பல்வேறுபட்ட இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரு கிலோ பால்மாவின் விலையை 350 ரூபாவால் அதிகரிக்குமாறு அரசாங்கத்திற்கு முன்மொழியப்பட்டது.

இந்த கோரிக்கைக்கு இணங்க ஒரு கிலோ பால்மாவின் விலையை 200 ரூபாவால் அதிகரிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

நாட்டின் நெருக்கடி நிலையையை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் பால்மாவின் விலை மீண்டும் அதிகரிக்க சாத்தியம் உண்டு – என லக்ஷ்மன் வீரசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...