chinaaa
செய்திகள்உலகம்

குழந்தைகள் பெற்றால் சொந்த வீடு! – அரசு அதிரடி

Share

குழந்தைகள் பெற்றால் சொந்த வீடு! – அரசு அதிரடி

சீனாவில் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் பெற்றுக்கொண்டால் சொந்த வீட்டு மானியம் அளிக்கப்படும் என சீனாவின் கன்சு மாகாணம் அறிவித்துள்ளது.

உலகின் அதிக சனத்தொகை கொண்ட நாடான சீனா நாட்டின் சனத்தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்தது.

இந்த நிலையில் அங்கு தற்போது சனத்தொகை பெரிதும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால் குழந்தை பிறப்பை ஊக்குவிக்க தற்போது அரசு பல்வேறு சலுகைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது.

அதன்படி சீனாவில் கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள சட்டரீதியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சீனாவின் கன்சு மாகாணம் 2 அல்லது 3 குழந்தைகள் பெற்றுக்கொண்டால் 40 ஆயிரம் யுவான் ( இலங்கை மதிப்பில் சுமார் 12 லட்சத்து 40 ஆயிரம்) ரூபா பெறுமதியில் மானியம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

இதனைக் கொண்டு தம்பதியர் வீடு வாங்கலாம். அத்துடன் 3 வயதாகும் வரை ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு 10 ஆயிரம் யுவான் (இலங்கை மதிப்பில் சுமார் 3 லட்சம் வரை) மானியம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

மேலும் இதேபோல் 11 சலுகைகளை 3 குழந்தைகள் பெறும் தம்பதிகள் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...