1616724880142250 scaled
செய்திகள்இலங்கை

வெளிநாடு செல்பவர்கள் பைஸர் பெற்றுக்கொள்வது அவசியம்!

Share

மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு தொழிலுக்காகச் செல்பவர்கள் பைஸர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது அத்தியாவசியம் என, வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொதுமுகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

இதுவரை, தொழில் நிமித்தம் வௌிநாடுகளுக்கு செல்வதற்காக வேலைவாய்ப்புப் பணியகத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் பதிவு செய்துகொண்டுள்ளனர் எனவும், இவர்களில் முதற் கட்டமாக சுமார் 8 ஆயிரம் பேருக்கு பைஸர் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஏனையோருக்கும் பைஸர் தடுப்பூசியைப் பெற்றுத்தருமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதவிர, சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்ட இலங்கை பணியாளர்கள் பூஸ்டர் தடுப்பூசியாக, பைசர் தடுப்பூசியைப் பெற்று தமது நாடுகளுக்கு வருமாறு, கட்டார் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வௌிநாடுகளுக்கு தொழிலுக்காகச் செல்ல எதிர்பார்த்துள்ளோருக்கு கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை, இன்று வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

நாரஹேன்பிட்டியிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றப்படுவதாகவும், தடுப்பூசி ஏற்றுவதற்கு வழங்கப்பட்டுள்ள திகதி மற்றும் நேரம் என்பவற்றை மாத்திரம் கருத்தில் கொண்டு, வைத்தியசாலைக்கு வருகை தருமாறும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...