1616724880142250 scaled
செய்திகள்இலங்கை

வெளிநாடு செல்பவர்கள் பைஸர் பெற்றுக்கொள்வது அவசியம்!

Share

மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு தொழிலுக்காகச் செல்பவர்கள் பைஸர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது அத்தியாவசியம் என, வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொதுமுகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

இதுவரை, தொழில் நிமித்தம் வௌிநாடுகளுக்கு செல்வதற்காக வேலைவாய்ப்புப் பணியகத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் பதிவு செய்துகொண்டுள்ளனர் எனவும், இவர்களில் முதற் கட்டமாக சுமார் 8 ஆயிரம் பேருக்கு பைஸர் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஏனையோருக்கும் பைஸர் தடுப்பூசியைப் பெற்றுத்தருமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதவிர, சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்ட இலங்கை பணியாளர்கள் பூஸ்டர் தடுப்பூசியாக, பைசர் தடுப்பூசியைப் பெற்று தமது நாடுகளுக்கு வருமாறு, கட்டார் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வௌிநாடுகளுக்கு தொழிலுக்காகச் செல்ல எதிர்பார்த்துள்ளோருக்கு கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை, இன்று வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

நாரஹேன்பிட்டியிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றப்படுவதாகவும், தடுப்பூசி ஏற்றுவதற்கு வழங்கப்பட்டுள்ள திகதி மற்றும் நேரம் என்பவற்றை மாத்திரம் கருத்தில் கொண்டு, வைத்தியசாலைக்கு வருகை தருமாறும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...

Untitled 100
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: ஈரானின் மஷ்ஹத் நகரில் ரயில் சேவைகள் அதிரடி நிறுத்தம்!

ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) ஆளுநர், அந்த நகரில் உள்ள...

Untitled 99
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்: தட்டுப்பாடின்றி வழங்க அமைச்சர் உறுதி!

உலகளாவிய சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் உயர்விற்கு இணையாக, இலங்கையிலும் உள்நாட்டு எரிவாயு விலைகள்...