வடகிழக்கின் முதலமைச்சராக இருக்க விரும்புகிறேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
வடக்கும், கிழக்கும் இணைந்த மாகாணசபையின் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கும் என் எண்ணம் குறித்து பலர் விமர்சனங்கள் முன்வைக்கப்படலாம்.
இது என்னுடைய விருப்பம், எனது தனிப்பட்ட ஆசை என்று அவர் கூறியுள்ளார்.
கிழக்கில் ஒருபோதும் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பேசி என்னுடைய அரசியலை நான் செய்யவில்லை என்று கூறிய இரா. சாணக்கியன் இது தனது தனிப்பட்ட விருப்பம் எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியை வெற்றிப் பெறச் செய்ய கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஒருபோதும் விரும்பியதில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
#SrilankaNews
Leave a comment