இலங்கை கடற்படையின் கைதுக்கு வலுக்கும் எதிர்ப்பு

118951040 9551027e 04fe 4046 b1c1 6f34ef837a31

srilanka

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களையும் விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக மீனவர்கள் தொடர்பில் எழுதியுள்ள கடிதத்தில்,  கடந்த 11ஆம் திகதி நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடி படகுகளில் மீன் பிடிக்க சென்ற 23 மீனவர்கள், 13 ஆம் திகதி பாரம்பரிய மீன்பிடித்தளமாக உள்ள பருத்தித்துறை அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைதான மீனவர்கள் காரைநகர் கடற்படை தளத்துக்கு அழைத்து செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது.

இந்திய, இலங்கை மீனவர்களுக்கிடையேயான இந்த நீண்டகால பிரச்சினையில் உடனடியாக இந்திய பிரதமர் தலையிட்டு,  இப்பிரச்சினையை நிரந்தரமாக தீர்த்திட, உறுதியான வழிமுறைகளை காண வேண்டுமென்றும் எனவும், மோடிக்கு எழுதிய கடிடித்தில்
குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு, மத்திய மீன்வள துறை துணையமைச்சர் எல். முருகன் கடிமெழுதியுள்ளார்.

Exit mobile version