image 61264ccd5d
செய்திகள்அரசியல்இலங்கை

மக்கள் ஆணையை அரசாங்கம் காட்டிக்கொடுத்துவிட்டது – சஜித் பிரேமதாச காட்டம்!

Share

மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், தற்போது கட்டணங்களை அதிகரித்து மக்கள் ஆணையைத் துஷ்பிரயோகம் செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாகச் சாடியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் இன்று விடுத்துள்ள விசேட அறிக்கையில், தேர்தல் மேடைகளில் மின்சாரக் கட்டணங்களை 33% ஆல் குறைப்போம் என முழங்கியவர்கள், இன்று 11.57% ஆல் கட்டணத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

9,000 ரூபா கட்டணத்தை 6,000 ரூபாவாகக் குறைப்பார்கள் என நம்பி வாக்களித்த மக்களுக்கு, தற்போது ஏழ்மையான வாழ்க்கையையே அரசாங்கம் பரிசாக அளித்து வருகிறது. ஐ.எம்.எப் நிபந்தனைகளை மக்களுக்குச் சாதகமாக மாற்றுவோம் என்று கூறிவிட்டு, தற்போது அந்த நிபந்தனைகளை அப்படியே அமுல்படுத்தி மக்கள் மீது சுமையை ஏற்றி வருவதாக அவர் குற்றம் சுமத்தினார்.

மின்சார நுகர்வோருக்கு வழங்கிய எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கி, அவர்களை உதவியற்ற நிலைக்குத் தள்ளியதன் மூலம் அரசாங்கம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாகச் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

‘டித்வா’ சூறாவளியினால் இலட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் வேளையில், அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அவசர அவசரமாக மின்கட்டணத்தை உயர்த்த முயல்வது மக்கள் விரோதச் செயலாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதைத் தவிர்த்து, மேடைகளில் வாக்குறுதி அளித்தபடி 33 சதவீதத்தால் கட்டணங்களைக் குறைக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், அரசாங்கத்தின் இத்தகைய மக்கள் விரோதப் போக்குகளுக்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

 

Share
தொடர்புடையது
Tourist Visa
இலங்கை

இலங்கையர்களுக்கு அனுமதி இல்லை!

தாய்வான் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள புதிய வீசா கொள்கை அறிவிப்பின்படி, இலங்கை பிரஜைகளுக்கான சுற்றுலா வீசா...

dengue 1
இலங்கை

அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்து – உடனடியாக வைத்தியசாலையை நாடவும்.

டெங்கு அறிகுறிகள் தென்படுவோர் தாமதிக்காது உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு...

chemmani Mass grave
இலங்கை

செம்மணிக்கு செல்ல ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவிற்கு நீதிமன்றம் பச்சைக்கொடி.

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை...

ஜி.எல். பீரிஸ்
இலங்கை

ஜெனீவாவில் இலங்கைக்கு இதுவும் நடக்கலாம் – எச்சரிக்கும் ஜி.எல். பீரிஸ்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. அங்கு...