IMG 20211106 WA0016
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் “சுகம் பேணும் நிலையம்” திறப்பு

Share

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் “சுகம் பேணும் நிலையம்” வட்டுக்கோட்டை ஆத்தியடி பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில், இன்றையதினம் (06) மாலை 3 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை மற்றும் வட்டுக்கோட்டை சமூகம் ஆகியன இணைந்து இந்த வைத்தியசாலையை ஆரம்பித்து வைத்தன.

மூளாய் – கூட்டுறவு வைத்தியசாலை சங்கத்தின் தலைவர் மா.ஞானேஸ்வரன் அவர்கள் தலைமை தாங்கிய இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் திரு. சிறீ சற்குணராசா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சம்பிரதாயபூர்வமாக வைத்தியசாலையை திறந்துவைத்தார்.

இந்த திறப்புவிழா நிகழ்வில் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் செயலாளர் திரு.க.செல்வராசா, மூ.கூ.வை. பொருளாளர் திரு.அ. கிருஷ்ணமூர்த்தி, வைத்திய அத்தியட்சகர், வைத்திய கலாநிதி கே.சுரேந்திரகுமாரன், வைத்தியர் பி.சிறீகிருஷ்ணா, வைத்தியர் றஜனி மற்றும் வைத்திய நிபுணர் வீரசுதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த வைத்தியசாலையின் இலவச வைத்திய சேவைகளான நீரிழிவு பரிசோதனை, இரத்த பரிசோதனைகள் உள்ளிட்ட பல பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.

தினமும் காலை 7 மணி தொடக்கம் காலை 10 மணிவரை மற்றும் மாலை 4 மணி தொடக்கம் 7 மணிவரை, வைத்திய நிபுணர்கள் பலர் இணைந்து இலவசமாக மருத்துவ ஆலோசனைகளை வழங்க முன்வந்துள்ளனர்.

இந்த வைத்தியசாலையின் சேவைகளில் வெளிநாடுகளில் வசிக்கும் வட்டுக்கோட்டையை சேர்ந்த உதவ முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG 20211106 WA0014 IMG 20211106 WA0015 IMG 20211106 WA0017 IMG 20211106 WA0019

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போர்ட் சிட்டி கடற்கரையில் யாழ்ப்பாண இளைஞர் சடலமாக மீட்பு: இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர் மர்ம மரணம்!

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறைப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கொழும்பு போர்ட் சிட்டி கடற்கரைப்...

09 1
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கை முறை மாற்றம்: நிரந்தர பாதுகாப்பு இனி இல்லை!

பிரித்தானியாவில் புகலிடம் கோருபவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு இனி நிரந்தரமானது அல்ல என்று உள்துறைச் செயலர் ஷபானா...

08 1
செய்திகள்உலகம்

ஈரான் – இஸ்ரேல் மோதல்: வான்வெளியை மூடுவதாக ஜோர்டான் அதிரடி அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றம் மற்றும் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஜோர்டான் அரசு...

07 1
செய்திகள்உலகம்

அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் உயிரிழப்பு – போர் உச்சக்கட்டம்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து ஈரானின் முக்கிய ராணுவ மற்றும் அணுசக்தித் தளங்களை இலக்கு...