12 7
செய்திகள்இலங்கை

இணையவழி விருந்து: போதைப்பொருட்களுடன் 12 நபர்கள் கைது!

Share

சுற்றுலா விடுதியொன்றில் இருந்து போதைப்பொருட்களுடன் 12 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிதிகம பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதியொன்றில் நேற்று (21) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சுற்றுலா விடுதியில் இணையத்தின் ஊடாக விருந்தொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.

பொலிஸாரால் சந்தேக நபர்களிடமிருந்து 01 கிராம் 625 மில்லி கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளும், 01 கிராம் ஐஸ் போதைப்பொருளும், மூன்று கிராம் 600 கிராம் கேரள கஞ்சா மற்றும் 2 கிராம் 25 கிராம் க்ரூஸ் போதைப்பொருளும், ஒரு கிராம் 700 மில்லிகிராம் ஹேஸ் ரக போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் 30 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், அம்பாறை, தல்பே, மெதகம, மாத்தறை, தனமல்வில, திஸ்ஸமஹாராம மற்றும் கோனபினுவெல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவருகிறது.

நேற்றைய தினம் மாத்தறை நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...