WhatsApp Image 2021 12 06 at 12.35.51 PM
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நீராடச்சென்ற இடத்தில் ஒருவர் பலி – இருவரை காணவில்லை!!

Share

பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நில்லம்பை நீர்த்தேக்கத்தில் நீராடச்சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் நீரில் மூழ்கியுள்ளனர்.

இதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், இருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . இத்துயர் சம்பவம் நேற்று(06) மதியம் இடம்பெற்றுள்ளது.

கண்டி பகுதியிலிருந்து நில்லம்பை நீர்த்தேக்கத்தில் நீராடுவதற்கு ஐவர் சென்றுள்ளனர். இதன்போது திடீரென நீர்மட்டம் அதிகரித்ததால் ஐவரும் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் இருந்தவர்களால் மூவர் காப்பாற்றப்பட்டுள்ளதுடன். அவர்கள் சிகிச்சைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

எனினும் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். 19 வயது தாயும், அவரின் மகளுமே  காணாமல்போயுள்ளனர்.

அவர்களை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.  சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

WhatsApp Image 2021 12 06 at 12.35.53 PM

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
rent 1200px 05 09 23
செய்திகள்இலங்கை

50 ஆண்டுகால வாடகைச் சட்டத்தில் மாற்றம்: புதிய குடியிருப்பாளர்கள் பாதுகாப்புச் சட்டமூலம் குறித்து மக்கள் கருத்து கோரல்!

இலங்கையில் 1972 ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலுள்ள பழைய வாடகைச் சட்டத்தை நீக்கிவிட்டு, உரிமையாளர் மற்றும்...

26 6981e649399d3
செய்திகள்இலங்கை

பெண் காவலரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கான்ஸ்டபிளுக்கு மரண தண்டனை!

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பு கோட்டை பகுதியில் பெண் காவலர் ஒருவரைக் கொடூரமாகக் கொலை...

20260203 141546
செய்திகள்அரசியல்இலங்கை

இனவாதமற்ற நாடு என்பது அரசின் போலிப் பிரச்சாரம்! – சுதந்திர தினத்தைக் கரி நாளாக அனுஷ்டிக்க ரெலோ தீர்மானம்.

தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் “இனவாதமற்ற, மதவாதமற்ற நாடு” என்ற கோஷம் ஒரு போலிப் பிரச்சாரம்...

1006733 stalin
செய்திகள்இலங்கை

தமிழக மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்க ஸ்டாலின் நினைத்தால் முடியும்! – வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் காட்டம்.

இலங்கைக் கடல் எல்லைக்குள் இந்தியக் கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து முன்னெடுக்கும் அடாவடித்தனங்கள் குறித்து அரசாங்கமும், கடற்றொழில்...