mahindananda aluthgamage
செய்திகள்இலங்கை

மஹிந்தானந்த தலை குறிவைப்பு!

Share

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்குள் கலந்துரையாடல் இடம்பெற்றுவருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

உரிய முகாமைத்துவ பொறிமுறையின்றி – மாற்று ஏற்பாடுகள் இன்றி அவசரமாக இரசாயன உரத்துக்கு தடை விதித்தமை, இதனால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, பெருந்தோட்டத்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி உட்பட மேலும் பல விடயங்களை மையப்படுத்தியே இப் பிரேரணையை கொண்டுவருவதற்கு ஏற்பாடு இடம்பெற்று வருகின்றது.

நம்பிக்கையில்லாப்பிரேரணையை தோற்கடிப்பதற்கான பலம் அரசாங்கம் வசம் இருந்தாலும், விவசாயிகளின் பிரச்சினைகளை பட்டியலிட்டு காட்டும் நகர்வாகவே இப் பிரேரணை முன்வைக்கப்படும் என தெரியவருகின்றது.

வரவு – செலவுத் திட்ட கூட்டத்தொடர் ஆரம்பமாவதால், பிரேரணை கொண்டுவந்தால்கூட அதனை ஜனவரி மாதமளவிலேயே விவாதத்துக்கு எடுப்பதற்கு அரசாங்கம் உடன்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நான்கு லீற்றர் பெற்றோல் வைத்திருந்தவருக்கு 21 நாட்கள் சிறை: நிக்கவரட்டிய நீதிமன்றம் தீர்ப்பு

சட்டவிரோதமான முறையில் நான்கு லீற்றர் பெற்றோலைத் தனது கைவசத்தில் வைத்திருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 48 வயதுடைய...

Untitled 1
செய்திகள்அரசியல்இலங்கை

இந்தியாவைப் பின்பற்றி எரிபொருள் வரியைக் குறையுங்கள்: ஜனாதிபதிக்குச் சஜித் பிரேமதாச அறைகூவல்!

இந்திய அரசாங்கம் அண்மையில் எரிபொருள் மீதான வரிகளைக் கணிசமாகக் குறைத்திருப்பதைப் போன்று, இலங்கை அரசாங்கமும் வரிகளைக்...

02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...