jeeva
செய்திகள்இலங்கை

வன்முறைகளுக்கு இடமில்லை! – எச்சரிக்கிறார் வடக்கு ஆளுநர்

Share

வடக்கு மாகாணம் அனைவருக்கும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வேன் என்று அம்மாகாணத்தின் புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

பதவிப் பிரமாணத்தின் பின்னர் முதன்முறையாக அவர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய காணொளி நேர்காணலிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எனது பதவிக்காலத்தில் வடக்கு மாகாணத்தில் வாள்வெட்டு சம்பவங்களுக்கு – கத்திவெட்டுச் சம்பவங்களுக்கு ஒருபோதும் இடமில்லை. ஆட்களின் கை, கால் வெட்டுவதற்கு இடமில்லை.

இந்த அடாவடிகளில் யாராவது ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பேன். வடக்கு மாகாணம் அனைவருக்கும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வேன்

இதேவேளை, வடக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சி தொடர்பில் அதிக கரிசனை செலுத்துவேன்.

பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகளை இனங்கண்டு அதற்கான தீர்வை வழங்க நடவடிக்கை எடுப்பேன்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்துவேன். இதற்குத் தீர்வு காண இலங்கை மீன்பிடி அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் நான் பேசுவது மட்டுமன்றி அவர்களூடாக இந்திய மத்திய அரசுடனும் பேசுவேன்” – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 27
இலங்கைசெய்திகள்

அழகில் திளைக்கும் இலங்கை : சுற்றுலா தளங்கள் குறித்த ஒரு பார்வை

சுற்றுலாப்பயணிகளின் வருகைக்கு சிறந்த இடமாக இலங்கையானது காணப்படுகின்றது. அந்த அழகிய இலங்கையானது இயற்கையான கடற்கரையினையும் ஏரிகள்...

25 6831b86463ab8
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவில் உயிரிழந்த காட்டு யானை

முல்லைத்தீவு வெலிஓயா பிரதேசத்திற்கு உட்பட்ட ஜனகபுரம் பகுதியில் காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது. குறித்த யானையின்...

7 30
இலங்கைசெய்திகள்

போலியான முறையில் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொண்ட இருவர் கைது

போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொண்ட இருவர் கைது செய்யப்பட்டுளளனர். குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்...

6 32
இலங்கைசெய்திகள்

துபாயிலிருந்து நாடு திரும்பிய இளைஞனுக்கு விமான நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி!

துபாயிலிருந்து கட்டார் வழியாக நாடு திரும்பிய இலங்கை இளைஞர் ஒருவரை விமான நிலையப் பொலிஸார் கைது...